திங்கள், 31 அக்டோபர், 2011

கடிமணம் நிகழ...


ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் எழுத தொடங்குகின்றேன்...இது ஆத்மா களிப்புறும் வேள்வி....
கடிமணம் நிகழ இப்பாடலை பாராயணம் செய்வோம்...


பாடல்
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே


பொருள்
சின்னஞ்சிறிய, மதியைப் போல் வளைந்து, மணம் வீசும் குளிர்ந்த நின் திருப்பாதங்களை, இப்பாவியேன் சிரம் வைக்க...அதுவும் வலிய வந்து....ஆண்டுகொள்ள...நான் என்ன புண்ணியம் செய்தேனோ?...எவ்வாறு இது சாத்தியப்பட்டது?...ஒருவேளை எனக்கே தெரியாமல்...அல்லது என்னையறியாமல் செய்த ஏதோ ஒரு புண்ணியமாக இருக்குமோ....நீ உன்னையறியாமலே இந்த நாயிற்கடையான சேய்க்கு நற்கதி ஈந்தாய்....முப்பத்து முக்கோடியும் தாண்டிய விண்ணகத்து அமரர்க்கு இந்த தவம் அமையுமா? அலைவீசும் திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் விழியுடை ஆதிசேஷனை பஞ்சனையாய் கொண்டு...அறிதுயில் கொள்ளும்...சங்கு, சக்கரம் கதை ஏந்திய எம் வைஷ்ணவி தாயே...




பாசுபதம் அளித்தானின் பரமபதம் பற்றும் - ஜெ. சூரியா