வெள்ளி, 7 மே, 2010

இன்னொரு துளி அமுதம்..

அபிராமி அந்தாதியில் இன்னொரு துளி அமுதம்....

நாயேனையும் இங்குஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்க்கச்சியே!

பொருள்: நாயைப் போல கேவலமான பிறவியை உடைய இவனையும் ஒரு பொருளாக நினைத்து, நினைவில்லாமலே எமை ஆண்டு கொண்டாய். ( நினைவிருந்தால் கண்டிப்பாக இந்தப் பாவிக்கு அருள் செய்திருக்க மாட்டாய்). உன்னை உள்ள வண்ணம் அறியும் சிறந்த அறிவை இந்த பேயனுக்கு தந்தாய். நான் என்ன பேறு செய்தேனோ... எம் தாயே, திருமாலின் தங்கையே! மலை மகளே!

- செ சூரிய குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக