முன்னுரை:
நண்பர்களே, முதலில் மங்களகரமாக ஆரம்பிக்க விழைந்து 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' 8ஆம் திருமுறையிலிருந்து ஒரு பாடலைத் தருகிறேன். சரணாகதி என்பதின் தீர்க்கமான மற்றும் முழுமையான விளக்கத்தை எனக்கு உணர்த்திய பாடல் இது.
முந்தை வினை ஓய இதை உரைத்து சர்வ மங்களம் பெற்று சதாசிவன் அருள் பெற்று எந்நாளும் இன்புற்று இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றி.
வேண்டத் தக்கது அறிவோய் நீ ! வேண்ட
முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு அறியோய் நீ! வேண்டி
என்னைப் பணி கொண்டாய்:
வேண்டி, நீ யாது அருள் செய்தாய் ? யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும்
உந்தன் விருப்பன்றே!
Suriya, sooperma.
பதிலளிநீக்கு