வியாழன், 28 ஜனவரி, 2010

தெய்வீகத் திருவுலா...

இனிய உறவுகளுக்கு,
கடந்த வாரம் நான் செங்கல்பட்டில் உள்ள திருத்தலங்களை தரிசித்தேன்.
திருக்கழுக்குன்றம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதன் அருகில் உள்ள ருத்ர கோடீஸ்வரர் ஆலயம் பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.

ருத்ரகோடீஸ்வரர் ஆலயமானது திருக்கழுக்குன்றத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் ஆலயத்தைக் காட்டிலும் பழமையானது.
இங்கு கோடி ருத்திரர்கள் இறைவனை வழிபட்டு த்ங்கள் சாபம் நீங்கியதாக வரலாறு கூறுகிறது. மேலும் இங்கு நந்திகேஸ்வரர் கருட பகவானின் சிரத்தைக் கொய்தி ஆணவத்தை அடக்கியதாகவும் வரலாறு தொடர்கிறது. முத்லில் இத்தலத்தை தரித்த பின்னரே திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நடராஜர் மிகவும் அழகான தோற்றத்துடன் காட்சியளிப்பார். ருத்ர கோட்டீஸ்வரியோ சாந்த சொரூபியாக அருள் பாலிக்கிறாள்.

மிகவும் அமைதியான, ஊன் உருக்கி, உள்ளொளி எழுப்பி உவப்பிலா ஆனந்தம் அளிக்கும் தலம். ஒருமுறை தொழுதால் கோடி முறை தொழுத பலன் கிடைக்கும்.
நேரம் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.

திருவுலா தொடரும்

- சூரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக