செவ்வாய், 2 மார்ச், 2010

இதோ இன்னொரு துளித் தேன்...

இனிய உறவுகளே!
இதோ இன்னொரு துளித் தேன்....
பருகுங்கள்....பரவசம் அடையுங்கள்.

அபிராமி அந்தாதி - பாடல் எண் -3

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழு நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள் : மேன்மை பொருந்தியவளே! நின் அன்பர்தம் பெருமையை போற்றாத கரும நெஞ்சம் கொண்டவர்கள் நரகத்திற்கு உறவாகியவர்கள். அப்படி பட்ட மனிதர்களை விட்டு நான் விலகி பிறிந்து விட்டேன். அதனால் எவராலும் அறிந்து கொள்ள முடியாத வேத நாயகித் தாயாம் நின்னை நன்கு அறிந்து உணர்ந்து பின்பு நின் திருவடியே கதி எனப் பற்றும் பேறு பெற்றேன்.

- ஜெ சூரிய குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக