இனிய உறவுகளே!
இதோ இன்னொரு கட்டுரை.
உலக நலவாழ்வு தினம் 2010
உலக நலவாழ்வு நிறுவனம் ( World Heath Organization - WHO ) துவங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் விழா இது. உலகெங்கும் சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக நலவாழ்வு நிறுவனம் செய்து வரும் பணிகளை நினைவுகூரும் தினமாக இது திகழ்கிறது. 1948ம் ஆண்டு உலக நலவாழ்வு நிறுவனத்தின் முதல் கூட்டம் அமைக்கப்பட்டபோது ஏப்ரல் மாதம் ஏழாம் தேதியை உலக நலவாழ்வு தினமாகக் கொண்டாடவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் படி 1950ம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக நலவாழ்வு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் முழக்கத்தை முன்வைத்து உலக நலவாழ்வு தினம் கொண்டாடுகிறது. கடந்த ஆண்டு சர்வதேச கைகள் கழுவும் தினமாக கொண்டாடியதை இப்பொழுது நினைவு கூர்கிறேன். இந்த ஆண்டு அறுபதாம் ஆண்டு. இதையொட்டி, நகரங்களை ஆரோக்கியமானவையாக ஆக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, "ஆயிரம் நகரங்கள் - ஆயிரம் வாழ்க்கை" என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் நகரங்களில் ஆரோக்கியத்திற்காகச் செயல்படும் அமைப்புகளின், ஆயிரம் சாதனைக் கதைகளை தொகுத்து, அனைவரும் அறியச் செய்வது; மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை திட்டமிட்டுள்ளது. நகரமயமாக்கல் பரவி வரும் சூழ் நிலையில் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த முழக்கம் செயல்படுத்தப் படுகின்றது.
- Dr J Suria Kumar MD
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக