வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஒருதுளி உருகல்


மாணிக்க வாசகரின் சென்னிப்பத்து எனும் பத்து பாடல்களில் ஒரு பாடல்.....
திருவாசகம்.... ஒருவாசகம்....குருவாசகம்....
திருவாசகம் பாறைகளையே உருக்கும்போது இந்த சூரியன் எனும் பசும் நெய் என்ன செய்யும்?....

சென்னிப்பத்து

தேவ தேவன் மெய்ச்சேவகன் தென்பெருந்துறை நாயகன்
மூவராலும் அறிவொணா முதல் ஆய ஆனந்த மூர்த்தியான்
யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிவொணா மலர்ச்சோதியான்
தூய மாமலர்ச் சேவடிக்கண் சென்னி மன்னிச் சுடருமே.

பொருள் :
தேவர்களுக்கெல்லாம் தேவன் ஆனவனும், தம் பக்தர்களின் உண்மைச் சேவகன் ஆனவனும், திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்ம நாதனாய் என் ஆத்ம நாயகனாய் இருப்பவனும், பிரம்மா, விஷ்ணு மற்றுமல்லாமல், தன்னையே தான் அறிய முடியாத பேரின்ப வடிவுடையவனும், யாராக இருப்பினும், தம் அடியார்கள் அன்றி வேறோருவர் அறிய முடியாத மலர்ந்த சோதி வடிவமானவனும் ஆன சிவபுரத்தரசனின் தூய மணம் பொருந்திய மலர் போன்ற திருவடியின் கீழ் எனது சிரம் மிக்க ஒளியுடன் விளங்கும்.

உருகி உருகி ஓடினாலும் உமையொருபாகனடி மட்டும்தேடியோடும்......சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக