சென்னிப்பத்து - இரண்டாவது பாடல்
அட்ட மூர்த்தி அழகன் இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த றன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.
இந்திரன், எமன், வாயு, வருணன், குபேரன், நிருதி, அக்னி மற்றும் ஈசானன் எனும் எட்டு மூர்த்திகளையும் தன்னுள் அடக்கி, இனிமையான அமுதாய், ஆனந்த வெள்ளமாய், பெருகும் சுந்தர வடிவாய், அனைத்திற்கும் மேலாய், சிவபுரத்தின் நாயகனாய், பெருந்துறை அடியார்களின் சேவகனாய், மகரந்தத் தேன் சொரியும் மணமுடைய கூந்தலுடைய எம் தாயை ஒருபாகம் வைத்து மாதொருபாகனய் நின்ற நின் வட்ட வடிவ செந்தாமரைப் போன்ற மலர்ப் பாதத்தில் எனது சிரமானது ஒளிரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக