வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நல்லடியார் நட்புப் பெற...


பதினாறு பேறுகளில் கபடு வாராத நட்பும் ஒன்று...அப்படி மனதில் சிறிதும் கபடு அற்றவர்கள் அன்னையின் அடியார்கள்..அந்த நல்லடியார்களின் நட்பை பெற்று நலம் பெற வாழ இப்பாடல் பாடுவோம்...

பாடல்:
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.


பொருள் :
என்ன புண்ணியம் செய்துள்ளாய் மனமே!..இப்போதே மலர்ந்த கருங்குவளை மலர்களையொத்த அழகிய அருள் ததும்பும் விழிகளுடன் உலகைக் காக்கும் ஜகன் மாதாவான அபிராமி அன்னையும்...கறுத்த கழுத்தும், சிவத்த உடலும் கொண்ட செம்பொன் மேனியான்..ஆலவாய் அண்ணலும் சேர்ந்து எம்மை ஆட்கொண்டு அருளும் காரணத்திற்காக மிகவும் விருப்பத்துடன் யாமிருக்கும் இவ்விடம் தேடி வந்ததுடன் அல்லாமல்...எம்மை தம் அடியார் கூட்டத்தின் நடுவே இருக்கச் செய்து...எம்மையும் அடியாராகவே பாவித்து....எம் சிரத்தின் மேல் தம் கமலம் போன்ற பாதம் பதித்திட்டு வீடு, பேறு, முக்தி, மோட்சம் அனைத்தையும் அருளினீர்....இதற்காக என்ன புண்ணியம் செய்துள்ளாய் மனமே....

காமனை எரித்தவனை.....காலனை மிதித்தவனை....காவிய நாயகனை...ஆவியுருக துதிக்கும் - மரு. ஜெ. சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக