அனைவருக்கும் ஏதாவது ஒரு விருப்பம் இருக்கும். அந்த விருப்பம் நிறைவேற.....வேண்டியதை வேண்டியவாறு அடைய.... இந்த பாடலை பாராயணம் செய்யுமாறு வேண்டுகின்றேன்.
பாடல்
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
பொருள் :
பவளக் கொடியில் நன்கு பழுத்த செம்பவளம் போன்று சிவந்த உதடுகளையும், அந்த உதடுகளினூடே வெண்முத்துக்கள் போன்று பிரகாசிக்கும் பற்களையும், எம் இதயத்தை குளிர வைக்கும் புன்முறுவலையும் உம் பலமாகக் கொண்டு உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியோன், தலைமாலை தலைக்கணிந்த பிரான், என் தலைவன் சர்வேஸ்வரனுடன் போரிட்டு, அந்த மகாதேவனின் மாதவத்தைக் கலைத்து, அவரை மகிழ்விக்கச் செய்த உடுக்கை போன்ற மெல்லிடையும், அந்த மெல்லிடையை சாய்க்கின்ற வகையில் ஒன்றுக்கொன்று துணையாய் அமைந்த தனங்களையும் உடையவளே! உமையே..உம்மை பணிந்தால் மட்டுமே தேவலோகமாளும் இந்திர பதவி திண்ணம் என்பதை உணர்ந்து உம்மை துதிக்கின்றோம்....
நால் வேத நாயகனின் கால் பாதம் பணியும் - மரு. ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக