செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

உலகினை வசப்படுத்த...


உலகம் வசப்பட இப்பாடலை பாராயணம் செய்வோம்..

பாடல்
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.


பொருள்
அம்மையாகிய உம்மிடத்தில் இருக்கும் பெருமிதத்தால் பருத்தும், ஒன்றுடன் ஒன்று இணையாகவும், தளர்ச்சியின்றி இறுக்கமாகவும், செழித்தும், குழைந்தும், இளகியும், வடம் போன்ற முத்து மாலையை தாங்கியும் உள்ள மலை போன்ற தனங்களைக் கொண்டு....எம் இறைவராம்...எதற்கும் அசராதவராம்....காமனை எரித்தவராம்....
ஈசரின்  வலிமை மிகுந்த நெஞ்சை உம் எண்ணத்திற்கு ஏற்றபடி ஆட்டுவிக்கும் திறம் கொண்ட எம் தாயே...எல்லா நலங்களையும் எமக்கருள்தலையே கொள்கையாகக் கொண்ட நாயகியே....நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே!...இனிமையும் குளுமையும் நிறைந்த சொற்களாலான வேதங்களையே உம் கால் சிலம்பாய் அணிந்துள்ளவளே..
மூவுலகாளும் ஈசரை வசியப்படுத்திய உம் திருமேனி எழில் கண்டால்...இவ்வுலகம் மட்டுமல்ல..மூவுலகமும் வசப்படும்....இது திண்னம்...


கல்யானைக்கு கரும்பு கொடுத்தானுக்கு..சொல்மாலை சூட்டும் - மரு. ஜெ. சூரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக