புதன், 27 ஜூலை, 2011

மலையான துன்பம் பனியாய் கரைய...


மலையான துன்பம் பனியாய் கரைய.....சொல்லுங்கள் இந்த துதியை....
அபிராமி அந்தாதியின் ஏழாம் பாடல்....

பாடல் :
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே...

பொருள் :
சுழல்கின்ற மத்திடை அகப்பட்ட தயிரினைப் போல, இங்கு பிறப்பு-இறப்பு என்று சுழலும் மத்திடை அகப்பட்டு தளர்ந்து போகும் என் ஆவியைத் தாங்கி, தளராமலிருக்க வகை செய்து மோட்ச உலகிற்கு வழி காட்டினாய். தாமரையில் உறையும் நான்முகனும், இடப்பாகம் உமக்களித்து மகிழ்ந்திருக்கும் பிறையணிந்த எம்பெருமானும், செங்கண்மாலும் என்றும் போற்றுகின்ற பாதங்களை உடைய சிவந்த செந்தூரமணிந்த பேரழகே வடிவானவளே!


அபிராமி அந்தாதி எனும் அமுதம் அனுதினமும் அருந்தும் ஆலவாயான் அடியான் சூர்யா 

1 கருத்து: