இம்மையும் மறுமையும் நன்றாய் அமைய ஓதுவோம் இதனை...
பாடல் :
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
பொருள்:
நான் நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும், கிடக்கும் போதும் மேலும் எந்த நிலையிலும், எந்த செயலிலும் நினைப்பது உன்னையே! என்றும் என் சிரமும் கரமும் வணங்குவது உந்தன் மலர் போன்ற திருவடிகளையே! எழுதப்படாத (எழுத முடியாத) வேதப் பொருளாய் என் உணர்வுகளில் ஒன்றியவளே! கருணையுடன் கூடிய அருள் வடிவானவளே! எம்மை கண்ணிமையாய்க் காக்கும் உமையே! மலையரசனுக்கு மகளாய் அன்று இமயத்தில் அவதரித்த மலைமகளே! பர்வதவர்தினியே! என்றுமே அழியாத ஆனந்தமான முக்தியை அளிப்பவளே!
சிவபுரத்தரசனை "சிக்" கெனப் பிடித்த - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக