இதைப் பாராயணம் செய்தால்....சர்வ வசியம் மட்டுமல்ல...அந்த சர்வேஸ்வரியே வசியப்படுவாள்...
பாடல் :
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
பொருள் :
கரிய நிறம் கொண்ட, திருநீலகண்டனாம் மாதொரு பாகனின் கண்களில் நின்று அவன் கருத்தைக் கவர்ந்த, வண்ணமிகு மந்திர மாமலையாம் மேருவை விட பெரிய, உம் கனத்த திருத்தனங்களால், ஞான சம்மந்தன் போல் அழுத பிள்ளைக்கு பாலும், பேரருளும் தந்து பசியாற்றி உலக உயிர்களுக்கெல்லாம் அன்னையாய் நின்றாய்.
இப்படி பெரும் கருணை கொண்ட நின் மார்பும், அதை அலங்கரிக்கும் மாலைகளும், உமது சிவந்த கரங்களில் வில்லும் அம்பும் பூண்டு, முருக்கம் பூ போன்ற மென்மையான, நெருக்கமான, சிவந்த உம் இதழ்களில் புன்னகையும் தரித்து என் முன்னே தோன்ற வேண்டும்.
தில்லையானிடம் எல்லையில்லாக் கடன்பட்ட - ஜெ. சூரியா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக