என்னாடா....தலைப்பே ஒரு மாதிரியாய் இருக்கின்றதே என்று எண்ணாதீர்கள். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு இல்லாமல், விட்டுக் கொடுத்தல் மற்றும் ஒரு புரிதல் இருந்தால்தான் அந்த இல்வாழ்வு நல்வாழ்வாய் அமையும்.
இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமைய, இல்லானும் இல்லாளும் சொல்ல வேண்டிய பாடல்...
பாடல்
ஆனந்த மாய்என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானந்தமாட ரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
பொருள் :
என் இன்பமானவளே! மதியணிந்தவனையே எண்ணும் என் சிந்தையெங்கும் வியாபித்துள்ள மதியானவளே! என் வாழ்வை நிறைத்துள்ள அமுதமானவளே! வானமே எல்லையாய்க் கொண்ட பேரழகுடையாளே! உன்னைப் போற்றுகின்ற நான்கு வேதங்களுக்கும் முதலுமாயும், முடிவுமாயும் நிற்பவளே! உடல் மீது பொடி பூசி, தீச்சட்டி கையில் ஏந்தி, கரியுரி போர்த்தி சுடலைக்காட்டில் ஆடும் எம்பெருமானின் திருமுடிகளில் தாங்கி நிற்பது மாணிக்கம் போன்று ஒளி வீசும் தாமரை போன்ற நின் திருவடிகளையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக