எண்ணியது திண்ணம் பெற...இடையூறுகள்...இடையிலேயே அகல...பாராயணம் செய்யுங்கள் இப்பாடலை...
பாடல்
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
பொருள்
உன்னடியாரின் பின் சென்று, உளமார அவர்களின் அடி தொழுது, பணிவிடைகள் செய்வதின் மூலம் எனது பிறவிப் பிணி தீர்க்கும் உபாயத்தை அறிந்து அதை பலகாலம் விடாமல் கர்ம சிரத்தையுடன் செய்கின்ற பாக்கியத்தை நான் இதுநாள் வரை செய்த தவப்பலங்களால் அடைந்தேன்...ஆக்கும் நான்முகன்...காக்கும் நாராயணன்...சம்ஹரிக்கும் சங்கரன் ஆகிய முத்தொழில் புரியும்...தேவர்களில் முதலான மும்மூர்த்திகளை பெற்றெடுத்த அன்னையே! இந்த பூவுலக துன்பங்களையெல்லாம் துடைத்தெறியும் அரிய மருந்தாக விளங்குபவளே! உம் சிறப்புக்கள் என்னென்ன உள்ளதோ அத்தனையும் மறவாமல் நினைந்து, உம்மை அணுப்பொழுதும் வணங்கிக் கொண்டிருப்பதே என் கடமையாகும்...
காளைகட்டியானின் ...காலை கட்டிய..ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக