வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சொல்வன்மையும், செல்வாக்கும் பெற..


சொல்வாக்கு நல்வாக்கானால்..செல்வாக்கு தானேவரும்...இருவாக்கும் கைகூட..பட்டரின் திருவாக்கை பாராயணம் செய்வோம்..


பாடல்
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே


பொருள் 
திரிபுர சுந்தரியே! உனக்குத் தெரியுமா...யாரெல்லாம் உன்னைப் போற்றித் துதிக்கின்றனர் என்று?.... படைத்தல் தொழிலின் அதிபதியாம் நான்முகப்பிரம்மாவும், காத்தல் தொழிலின் அதிபதியாம்...மண்ணுண்டு...விண்ணளந்த எம்பெருமான் செங்கண் மாலும், அழித்தல் தொழிலின் அதிபதியாம் கூடல் நகரின் ஆடல் நாயகன் சிவபெருமானும் உன்னை என்நாளும் போற்றித் துதிக்கின்றனர்...சுகந்த மணம் வீசும் கடம்ப மாலையை அணிந்து மகிழும் கடம்பவனக் குயிலாம், எனையாளும் மதுரையின் அரசி மீனாட்சித் தாயே ! மூவரும் தேவரும் போற்றும் நின்மலர்போன்ற பாதங்களை கடையேனின் நாவிற் உதித்த சொற்களும் போற்றி அலங்கரிப்பது....மிகவும் நகைச்சுவை ததும்பும் வியப்புக்குரிய ஒன்றாகும்....

நால்வேதம் ஆனானை....நான்முகன் நாரணன் காணானை...வாதவூரான் வாசகத்தால் வசியப்படுத்தும்..ஜெ. சூரியா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக