எக்காலமும் நற்காலமாக முக்காலமும் உணர வேண்டும்....முக்காலமும் உணர இப்பாடலை ஒரு காலமாவது ஓதுவோம்.
பாடல்
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
பொருள்:
பச்சைவண்ணத் திருமேனி கொண்டு, சொல்வதை சொல்லும் கிளியாக அல்லாமல் சொல்வதை செய்யும் கிளியாக மதுரையம்பதியில் நின்றவளே! உன்னையே கதியென்றிருக்கும் நின் அடியார்களின் மனதில் என்றும் அணையா தீபச் சுடராக சுடர்விடும் பேரொளியே! அப்பேரொளியின் உள்நிறைந்து ஒளிக்கும் ஆன்ம ஒளியானவளே! நினைத்துப் பார்க்கையில் அண்ட பேரண்டமாய் பரந்த சூன்ய வெளியானவளே! பஞ்சபூதங்களாம் விண்ணாய், மண்ணாய், வளியாய், ஒளியாய் (தீ), நீராய் நின்ற என் வராகித் தாயே! இந்த சிறியோனின் சிற்றறிவிற்கும் எட்டும் அளவிற்கு நின்ற உன் கருணை ஒரு பேரதிசயமே!
பெரிய கோவில் கொண்டானை தன் சிறிய நாவில் கொண்டாடும் - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக