வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மன நோய் தீர..


எல்லோரும் மனதார சொல்லுங்கள்.. மனநோய் தீர...


பாடல்
உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே


பொருள்
என்னை ஏமாற்றி வஞ்சம் செய்து...மீண்டும் இப்பிறவிச் சூழலில் சிக்கவைக்கமுயலும் காமம், குரோதம், ஆணவம் என்னும் மும்மலங்களையும் உடைத்து எம் பிறவிப் பிணி தீர்ப்பவளே! உன்னையும் உன் பாத தரிசனத்தையும், இக்கடையேன் மேல் கடைக்கண் காட்டிய கடையூர்க்காரியான உன் அன்பை எண்ணி எண்ணி உருகும் வண்ணம் என்னை ஆளாக்கியவளே! தாமரை மலர் போன்று சிவந்த நின் பாதங்களை சிரம்மேல் சூடும் பணியை...அந்த பாக்கியத்தை எமக்கு மட்டுமே உவந்தளித்த எம் தாயே!  கபடம் நிறைந்த வேடதாரியான எனது உள்ளத்து ஊறும் கெட்ட எண்ணங்களை உனது அருள் மழையால் கழுவி துடைத்து...இப்பிறவியை சுத்தமாக்குபவளே! இவ்வளவும் எமக்காக செய்யும் பேரழகியான உம் அருளை என்னவென்று சொல்வேன் என் அம்மையே!




நந்திவாகனனை புந்தியில் வைத்தடி போற்றும் - ஜெ. சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக