இந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லிப்பாருங்கள்...நெஞ்சம் ஆழ்நிலைத் தியானத்தில் நிலைப் பேறு அடையும்.
பாடல்
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!!
பொருள் :
ஊனுருக பாடுவது உன் புகழையே! உளமுருக கற்பது உனது திருநாமங்களையே! காதலாகிக், கண்ணீர் சிந்தி பக்தி செய்வது உனது இரு பொன் திருவடிகளையே! இரவு பகல் எந்நேரமும் மகிழ்வுடன் கழித்திருப்பது நினைப்போற்றும் தூயஅடியாருடன் மட்டுமே! இத்தனை பாக்கியங்களும் ஒருசேரக் கிடைக்க முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ... ஏழுலகையும் பெற்ற என் அன்னையே!
மாதொரு பாகனை...மாலொரு பாகனை...மனமொருபாகம் வைத்த - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக