செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தீரா வியாதிகள் தீர...


இருப்பதிலே தீராவியாதி இந்தப் பிறவிதான்...இந்த தீரா வியாதியை தீர்க்க....தினந்தோறும் சொல்லுவோம் இப்பாடலை...


பாடல்
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே


பொருள்
ஒளிநின்ற கோளங்கள் ஒன்பதிலும் உறையும்....நவ இரத்தினமே!...அந்த நவ இரத்தின மணியின் உள்ளுறைந்த என்றுமே மங்காத ஒளியே!.. ஒளிவீசும் அம்மணிகளை அணிகலங்களாக அணிந்த அணிகலனே! உன்னால் அணியப் படும்...அந்த அணிகலன்களுக்கு அழகை வழங்கி..அணிக்கு அணியாக திகழும் அகிலாண்ட நாயகியே!  நின்னைச் சரணடையாதோர்க்கு பிறவிப் பிணியானவளே! நின் திருப்பாதம் தொழுதேத்துவோரின் பிறவிப் பிணி தீர்த்து பிறவாநிலையளிக்கும் அருமருந்தானவளே! பிறவாநிலைகொண்ட தேவரும், மூவரும் போற்றித் துதித்து மகிழும் விருந்தே! அமுதே!.. உன் பாதக் கமலத்தை கரம் கூப்பி, என் சிரம் சூடிய பின், வேறு எவரையும் நான் ஏறெடுத்தும் பார்க்கேன்...




அருவமும்...உருவமும் ஆனானை கருமமே கண்ணாய் துதிக்கும்- ஜெ. சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக