புதன், 17 ஆகஸ்ட், 2011

வீடு, வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக...


இப்பாடலை படித்தால்...இம்மையில் பொருட் செல்வமும், சொந்த வீடும், ...மறுமையில் அருட் செல்வமும், மோட்ச வீடும், சுவர்க்க வாசலும் நமக்கமையும்


பாடல்
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


பொருள்


எம்மை உன் பாசத்தினால் தைத்த தையல் நாயகியே! நீ எங்கு உறைகின்றாய்?...எது உன் ஆலயம்? நஞ்சே அமுதாய் நயந்த ஆதியந்தமில்லாதானின் பாதியா...விடமுண்டவனின் இடம் இப்போது உன் இடம்....சரிதானே... வேதநாயகியே, வேதப் பரம்பொருளாய்..மறைகளை உன்னுள் மறைத்த நீ அம்மறைகளின் ஆதியாய் இருக்கின்றாயா இல்லை அந்தமாய் இருகின்றாயா?
(இது புரியாமல் அல்லது புரிந்ததால் தான் பட்டர் அந்தாதி பாடுகின்றாரோ?) வெண்பனி மதியிலா....தாமரை மலரிலா....என் மனதிலா
அல்லது பரமன் பள்ளி கொள்ளும்...இலக்குமி வாசம் செய்யும் பாற்கடலா? தாயே! நீ எங்கும் நீக்கமற நிறைந்து, பரிபூரண மங்கலமே வடிவானவளாய் இருக்கின்றாய்....

வைத்தியநாதனை பைத்தியமாய் பற்றும் -ஜெ. சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக