செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இம்மை மறுமை இன்பங்கள் அடைய


இவ்வுலகவாழ்விலும்....மேலுலக வாழ்விலும் எல்லா நன்மைகளும் பெற ...இதோ ஒரு பாடல்.....


பாடல்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் 
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

பொருள்
மெய்யில் உயிர் கலந்தது போல ..நள்ளிரவில்ஆனந்தத் தாண்டவம் பயின்றாடும் விரிசடையானுடன்....சொல் பொருளுமாய்..சொல்லே பொருளுமாய்....சொல்லும் பொருளுமாய்...சொல்லா பொருளுமாய்...அர்த்தமாகி அனர்த்தமாகி, ஆனந்தமாகி, அர்த்தநாரியுமாகி நிற்கும் சுகந்த மணம் வீசும் அழகிய பச்சைநிறக் கொடி போன்றவளே! .அனுதினமும், இரவும் பகலும், இன்று பூத்த வாச மலராய் பாசம் காட்டும் நின் தாளிணை சிரம் கொண்டு வணங்கும் அடியார்களுக்கு இம்மையில் அழிவிலா அரச சுகங்களும், பின் நின் திருவடிகளை தேடி மோட்ச வீடு பெறும் திண்ணமாகிய தவ வாழ்வும், திருவடி சேவையினால் மறுமையில் அமரருக்கெல்லாம் அமரராகும் நித்திய சிவலோக வாழ்க்கையும் கைகூடும்.....

காமதகனம் செய்தவனை தன் கோபதகனம் செய்ய தவமியற்றும்- ஜெ. சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக