வியாழன், 22 செப்டம்பர், 2011

மரணாவஸ்தையிலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்க...


எந்த நிலையிலும்...அருள்வடிவாய் விளங்கும் அபிராமியின் நினைவு...சிந்தையிலிருந்து சிதறாமலிருக்க... பாடுவோம் இப்பாடலை...


பாடல்
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே


பொருள்
என்னால் செய்யப்பட்ட கர்ம காரியங்களால் ஏற்பட்ட வினைக்கேற்ப, என் வினைக்கேற்ற விலை கொடுக்க, நான் நடு நடுங்க எமன் என்னை அழைத்துச் செல்லும் போது...நான் காலனின் பாசத்தில் சிக்கி மரணவேதனையில் அவஸ்தைப் படும் அக்கணத்திலும் உன்னை மட்டுமே அன்னையென்று அழைப்பேன்...அப்போது ... அத்தனும், சித்தனும், பித்தனுமான பிறைசூடிய சந்திர மௌலீஸ்வரனாம் சிவனின் சித்தத்தைக் குழைக்கக் கூடிய சந்தன மணம் வீசும் குவிந்த தனங்களையுடய கோமளவல்லித் தாயே..நீ என் முன் விரைவாக ஓடி வந்து...பயப்பட வேண்டாம் என்று எமக்கு ஆறுதல் அளித்துக் காப்பாய்....




நாகமணிந்தானின் திருவடியை மோகம் கொள்ளும் - ஜெ. சூரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக