நமக்கு சிறந்த நிலபுலங்கள் கிடைக்க....அபிராமி அந்தாதியின் 34ஆம் பாடலான இதை பாராயணம் செய்வோம்..
பாடல்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே
பொருள்
பிறவிப்பெருங்கடல் கடக்க...வடிவுடைநாயகியான உன் திருவடிகளே சரியான வழி என்று உம் தாமரை போன்ற பொற் பாதங்களை சரணம் என தஞ்சம் அடைந்த அடியவர்களுக்கு, சேயின் மீது தாய் கொண்ட பாசத்தோடு, அவர் தம்மை ஆட்கொண்டு, நீ என்றும் உறையும் இடங்களான....வேத நாதத்தால் மூவுலகிலும் படைப்பை நிகழ்த்தும் நான்முகனில் கலைமகளாக உறையும் நாவையும், சுகந்த மகரந்தம் நிரம்பிய மதுவைச் சொரியும் மலர்களையும், ஒளிவீசும் மாணிக்கங்களையும் அணிந்த மாலனில் அலைமகளாக உறையும் மார்பையும், படமெடுக்கும் அரவணிந்து நடனமாடும் சிவபுரத்தரசனில் மலைமகளாக மேனியில் உறையும் இடப்பாகத் திருமேனியையும், பொன்னிற தேன் கொண்ட தாமரையையும், சந்திரனையும், சூரியனையும் காட்டி.....அதற்கு மேல்... கருணையும் பரிவும் காட்டி, மண்ணவரை விண்ணவராக்கும் வித்தகியே!....உம்மை வணங்குகின்றேன்..
சரபனே சரணம் எனும் - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக