தொடர்ந்து வரும் தொல்லைகள் அகல, அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்க...இப்பாடலைப் பாராயணம் செய்யுங்கள்..
பாடல்
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே
பொருள்
என்றுன்னை மனதில் வைத்தேனோ அன்றே என்னை நீ ஆட்கொண்டாய்..உம் அருளால் எம்மை மீளா அடிமை கொண்டாய்....ஆட்கொண்டு, அடிமை கொண்ட பின் நான் உன் உடமையாகிவிட்டேன்......உம் உடமையை உதறுவது உலகம் உய்யும் உமைக்கு உகந்ததாகுமா? இனிமேல் நான் என்ன செய்தாலும், மதிகெட்டு, நடுகடலில் போய் விழுந்தாலும்...அதையெல்லாம் பொறுத்துக் காத்து சேயாகிய எம்மை (பிறவிக்) கரையேற்ற வேண்டியது தாயாகிய உம் திருவுளமாகும்....ஒன்றானவளே!...பலவுருவானவளே!...உருவமும் அருவமும் ஆனவளே!...எம் உமையே...உம்மை போற்றுகின்றேன்...
ஈசனடி நேசன் - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக