பிறவிப் பிணியறுத்து...மறுமையில் இன்பம் உண்டாக....பாடுவோம் இப்பாடலை....
பாடல்
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே
பொருள்
மலைமகன் மகளே!, பொடி பூசி அம்பலமாடும் கரியுரியானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் கொண்டவளே! மங்கையும், கங்கைகொண்ட மங்கைபங்கனும், அனைத்தும் அடங்கிய ஒரே உருவில் வந்து...கேடுகெட்ட ஈனப்பிறவியான என்னை தங்கள் திருவடி வருடி அன்பு செய்ய பணித்து அருள் மழை பொழிந்தீர்கள்..இனி நான் பின்பற்ற எந்த மதமும், நெறியும், மார்க்கமும், பாதையும், வழியும்..இல்லை..இனி எனக்கு பிறவிகள் கிடையாது....ஆகவே இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் கிடையாது....பெண், பொன் மீது வைத்த பந்தமும் நீங்கி, சலனமற்ற நீரோடையாய் மனம் உன் திருவடி நோக்கி பயணிக்கின்றது....
காட்டாடும் பிரானுக்கு கனகமணி சூட்டும் ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக